டிச.03,2013. ஹாங்காங்கில் புதிய வகை பறவைக் காய்ச்சலால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளது
உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது. H7N9 எனும் நோய்க் கிருமியால்
35 வயது நபர் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார் எனவும், இது, பறவைக் காய்ச்சலின் புதிய வகை
என்றும் சொல்லப்படுகிறது. பாதிக்கப்பட்டுள்ள நபர் இந்தோனேஷிய நாட்டைச் சேர்ந்தவர்
எனவும், வீட்டுப் பணியாளராக வேலை செய்த அவர் அண்மையில் சீனாவுக்கானப் பயணம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்
எனவும் கூறப்படுகிறது. இவரோடு தொடர்பு கொண்டிருந்த ஏறக்குறைய 200 பேரை இந்நோய்க்கிருமி
தாக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன்னர் இவ்வகையான பறவைக் காய்ச்சலால்
ஒருவர் தாய்வானில் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இந்த புதிய வகை கிருமித்
தாக்குதல் கடந்த ஏப்ரல் மாதம் முதலில் தெரியவந்தது. அதன் காரணமாக ஐம்பது பேர் உயிரிழந்தனர்.