டிச.02,2013. மெக்சிகோவின் வேராகுரூஸ் மாநிலத்தில் இரு குருக்கள் கொலைசெய்யப்பட்டுள்ளதையொட்டி
நான்குபேரைக் கைதுச்செய்துள்ளது அந்நாட்டு காவல்துறை. Tuxpan மறைமாவட்டத்தின் San
Cristobal பங்குத்தளத்தின் குருக்கள் Hipolito Villalobos Lima, Nicolas de la Cruz Martinez
ஆகிய இருவரின் கொலையுண்ட உடல்களும் வெள்ளியன்று கண்டெடுக்கப்பட்டதாக மறைமாவட்டம் அறிவித்தது. அவர்கள்
எவ்வாறு கொலைச்செய்யப்பட்டார்கள், கொலைகளின் நோக்கம் என்ன என்பது குறித்து எதுவும் அறியப்படாத
நிலையில், கொலைத்தொடர்பாக நான்குபேரை கைதுசெய்துள்ளது மெக்சிகோ காவல்துறை.