2013-12-02 16:53:12

பாவநிலையிலிருந்து ஆண்டவரிடம் உதவி கேட்போம், திருத்தந்தை பிரான்சிஸ்


டிச.02,2013. உனது பாவங்கள் பெரியனவா? ஆண்டவரே, என்னை மன்னித்தருளும், நான் எனது பாவங்களிலிருந்து மீண்டும் எழுந்துவர உதவி செய்யும், எனது இதயத்தை மாற்றும் என அவரிடம் கேட்போம் என்று இத்திங்களன்று தனது டுவிட்டரில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், போர் நடவடிக்கைகளை இயந்திரத்தனமாக்குவது மிகுந்த கவனமுடன் கையாளப்பட வேண்டிய ஒன்று, மனிதர்மட்டுமே ஒழுக்கநெறி சார்ந்த தீர்மானங்களை எடுக்க முடியும் என்ற, பேராயர் சில்வியோ தொமாசியின் கூற்றை தனது @terzaloggia டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளது திருப்பீடச் செயலகம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.