2013-11-30 16:43:56

சிரியாவில் இடம்பெறும் சண்டை ஒரு தலைமுறைச் சிறாரின் வாழ்வை அழிக்கின்றது, ஐ.நா.


நவ.30,2013. சிரியாவில் இடம்பெறும் சண்டை ஒரு தலைமுறைச் சிறாரின் வாழ்வை அழிக்கின்றது என, ஐ.நா. வெளியிட்ட புதிய அறிக்கை ஒன்று எச்சரிக்கின்றது.
பள்ளிக்குச் செல்லும் வயதுடைய சிரியா நாட்டுச் சிறார், அண்டை நாடுகளுக்குச் அகதிகளாகச் சென்று கல்வி கற்காமலும், கட்டாயமாக வேலைக்குச் செல்லும் நிலையிலும் உள்ளனர் எனவும் அவ்வறிக்கை கூறுகின்றது.
லெபனன் மற்றும் ஜோர்டனில் ஏறக்குறைய மூன்று இலட்சம் சிரியா நாட்டுச் சிறார் பள்ளிக்குச் செல்லாமல் அகதிகளாக வாழ்கின்றனர் எனவும், லெபனனில் உள்ள சிரியா நாட்டுச் சிறாரில் ஏறக்குறைய 80 விழுக்காட்டினர் பள்ளிக்குச் செல்லவில்லையெனவும் ஐ.நா. கூறியுள்ளது.
சிரியாவின் சண்டையில் 11 ஆயிரத்துக்கு அதிகமான சிறார் கொல்லப்பட்டுள்ளனர் என, இலண்டனை மையமாகக் கொண்ட ஒரு கருத்துக்கணிப்பு மையம் கூறியுள்ளது.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.