நவ.30,2013. வருகிற டிசம்பர் 2 முதல் 6 வரை வத்திக்கானில் அனைத்துலக இறையியல் பணிக்குழுவினர்
கூட்டம் நடைபெறவுள்ளது. ஒரே கடவுள் கொள்கை, கிறிஸ்தவ கோட்பாட்டுச்சூழலில் திருஅவையின்
சமூகக் கோட்பாடுகள், விசுவாச உள்ளுணர்வு குறித்த பிரச்சனைகள் ஆகிய மூன்று தலைப்புகள்
குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கலந்துகொள்ளும்
பிரதிநிதிகள் இக்கூட்டத்தின் இறுதி நாளில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்திப்பார்கள்
என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இறையியல் பணிக்குழுவின் தலைவரான விசுவாசக்கோட்பாட்டுப்
பேராயத் தலைவர் பேராயர் Gerhard Ludwig Müller அவர்களின் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தை
இப்பணிக்குழுவின் செயலரான தொமினிக்கன் சபையின் அருள்பணி Serge-Thomas Bonino நடத்துவார்.
அருள்பணி Bonino, விசுவாசக்கோட்பாட்டுப் பேராயத்தின் ஆலோசகராகவும் உள்ளார்.