2013-11-29 14:40:10

நவ.30,2013 கற்றனைத்தூறும்... உயிரினங்கள்-விநோதங்கள்


*ஆஸ்திரேலியாவின் காணாங் குருவி என்ற பறவை, முட்டையில் இருந்து வெளியில் வந்ததும் பறக்கத் தொடங்கிவிடும்.
*பிகாலோ என்ற மீன் பின்புறமாகவும் நீந்தும்.
*யானை தன் துதிக்கையில் 9 லிட்டர் நீரை உறிஞ்சிக் கொள்ளும்.
*ஒரு சிலந்தியின் வலை சுமார் 2000 மைல் நீளத்திற்கு வரும்.
*உப்புத் தண்ணீரை நல்ல தண்ணீராக மாற்றும் சக்தி பெங்குயின் பறவைக்கு உண்டு.
*தேனீக்கள் ஒரு கிலோ தேனை உற்பத்தி செய்ய 50 இலட்சம் பூக்களில் தேனை உறிஞ்சுகின்றன.
*எறும்புகள் தூங்குவதே இல்லை
*ஒரு நத்தையால் மூன்று ஆண்டுகள் வரை தூங்க முடியும்
*கரப்பான்பூச்சியால் ஒன்பது நாட்கள் வரை தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வாழ இயலும்
*பச்சோந்தியின் நாக்கு அதன் உடலைவிட இருமடங்கு நீளமாக இருக்கும்
*பட்டாம்பூச்சி, அதன் கால்களைக் கொண்டுதான் உணவை ருசிக்கின்றது
*பூச்சிகளின் இரத்தம் மஞ்சள் நிறத்தில் இருக்கும்
*பனிக்கரடிகள் அனைத்தும் இடது கை வழக்கமுடையவை
*முதலைகளால் நாக்கினை வெளியே நீட்ட இயலாது
*ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மித்ரா என்ற பறவை ஒன்பது நிறத்தில் தெரியும்.
*கடல் புறாக்கள் நீரில் மிதந்துகொண்டே தூங்கும்.
*குவாரின் என்ற பறவை மல்லாந்து தூங்கும்.
*புறா ஓய்வெடுக்காமல் ஏறத்தாழ ஆயிரம் கிலோமீட்டர் வரை பறக்கும் திறன் படைத்தது.

ஆதாரம் : இணையம்








All the contents on this site are copyrighted ©.