*ஆஸ்திரேலியாவின் காணாங் குருவி என்ற பறவை, முட்டையில் இருந்து வெளியில் வந்ததும் பறக்கத்
தொடங்கிவிடும். *பிகாலோ என்ற மீன் பின்புறமாகவும் நீந்தும். *யானை தன் துதிக்கையில்
9 லிட்டர் நீரை உறிஞ்சிக் கொள்ளும். *ஒரு சிலந்தியின் வலை சுமார் 2000 மைல் நீளத்திற்கு
வரும். *உப்புத் தண்ணீரை நல்ல தண்ணீராக மாற்றும் சக்தி பெங்குயின் பறவைக்கு உண்டு. *தேனீக்கள்
ஒரு கிலோ தேனை உற்பத்தி செய்ய 50 இலட்சம் பூக்களில் தேனை உறிஞ்சுகின்றன. *எறும்புகள்
தூங்குவதே இல்லை *ஒரு நத்தையால் மூன்று ஆண்டுகள் வரை தூங்க முடியும் *கரப்பான்பூச்சியால்
ஒன்பது நாட்கள் வரை தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வாழ இயலும் *பச்சோந்தியின் நாக்கு
அதன் உடலைவிட இருமடங்கு நீளமாக இருக்கும் *பட்டாம்பூச்சி, அதன் கால்களைக் கொண்டுதான்
உணவை ருசிக்கின்றது *பூச்சிகளின் இரத்தம் மஞ்சள் நிறத்தில் இருக்கும் *பனிக்கரடிகள்
அனைத்தும் இடது கை வழக்கமுடையவை *முதலைகளால் நாக்கினை வெளியே நீட்ட இயலாது *ஆஸ்திரேலியாவில்
வசிக்கும் மித்ரா என்ற பறவை ஒன்பது நிறத்தில் தெரியும். *கடல் புறாக்கள் நீரில் மிதந்துகொண்டே
தூங்கும். *குவாரின் என்ற பறவை மல்லாந்து தூங்கும். *புறா ஓய்வெடுக்காமல் ஏறத்தாழ
ஆயிரம் கிலோமீட்டர் வரை பறக்கும் திறன் படைத்தது.