திருத்தந்தை பிரான்சிஸ் : பிறரை மன்னிப்பதற்கு ஆண்டவரிடம் அருள் வேண்டுவோம்
நவ.29,2013. பிறரை மன்னிப்பது கடினம். எனவே, ஆண்டவரிடம் அருள் வேண்டுவோம். இதன்மூலம்
நாம் எப்பொழுதும் பிறரை மன்னிக்க இயலும் என, இவ்வெள்ளிக்கிழமையன்று, தனது டுவிட்டர் பக்கத்தில்
எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், திருப்பீடப் பொருளாதார நிர்வாகச் சீர்திருத்தம்
குறித்த அவைக்குத் தனது பிரதிநிதியாக, பேரருள்திரு Alfred Xuerebஐ நியமித்துள்ளார் திருத்தந்தை
பிரான்சிஸ். திருப்பீடத்தின் பொருளாதார மற்றும் நிர்வாகத் துறைகளின் சீர்திருத்தத்தை
மேற்பார்வையிடுவதற்கு ஒரு சிறப்புக் குழுவையும், வத்திக்கான் வங்கி எனப்படும் சமயப் பணிகள்
நிறுவனத்தை மேற்பார்வையிடுவதற்கு ஒரு குழுவையும் இவ்வாண்டில் உருவாக்கினார் திருத்தந்தை
பிரான்சிஸ். இவ்விரு குழுக்களின் பணிகளை மேற்பார்வையிட்டு அவை குறித்தத் தகவல்களை
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு வழங்குவார் பேரருள்திரு Alfred Xuereb.