2013-11-28 15:45:47

மால்ட்டாவில், குடியேற்றதாரர் குறித்த ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் கருத்தரங்கு


நவ.28,2013. குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்ந்தோர் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்கென ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் குடியேற்றதாரர்க்கான மேய்ப்புப்பணிக் குழுக்களின் தலைவர்களும் மற்ற உறுப்பினர்களும் மால்ட்டாவில் வருகிற டிசம்பர் 2 முதல் 4 வரை கருத்தரங்கு ஒன்றை நடத்தவுள்ளனர்.
குடியேற்றதாரரும், புலம்பெயர்ந்தோரும் முன்வைக்கும் சவால்கள், இவ்விவகாரம் குறித்த ஆயர் பேரவைகளுக்கு இடையே ஒத்துழைப்பு, குடியேற்றதாரருக்குப் பொறுப்பான தேசிய இயக்குனர்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள், அவர்களின் அனுபவங்கள், குடியேற்றதாரர் குறித்த கொள்கைகள் போன்றவை இக்கருத்தரங்கில் விவாதிக்கப்படும்.
மால்ட்டாவின் La Valletta பேராயர் Paul Cremonaவின் அழைப்பின்பேரில் அந்நகரில் நடைபெறும் இரண்டு நாள் கருத்தரங்கில், குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்ந்தோர் மத்தியில் சிறந்த மேய்ப்புப்பணியாற்றும் வல்லுனர்கள் மற்றும் ஆர்வலர்களும் கலந்து கொள்கின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.