நவ.26,2013. திருஅவை ஒரு மறைபோதகர். நற்செய்தியின் மகிழ்ச்சியை உலகெங்கும் எடுத்துச்
செல்வதற்கு கிறிஸ்து நம்மை அனுப்புகிறார் என, இச்செவ்வாய் தனது டுவிட்டர் பக்கத்தில்
எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், திருவருகை காலத்தின் தொடக்கமாக, வருகிற
சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு, உரோம் பல்கலைக்கழக மாணவ, மாணவிகளோடு மாலை திருப்புகழ்மாலை
செபிப்பார் திருத்தந்தை பிரான்சிஸ். இன்னும், வருகிற டிசம்பர், சனவரி மாதங்களுக்கான
திருத்தந்தையின் திருவழிபாட்டு நிகழ்ச்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன. டிசம்பர் 8ம் தேதி
மாலை 4 மணிக்கு இஸ்பானிய வளாகம் சென்று அன்னைக்கு அஞ்சலி செலுத்துதல், 24ம் தேதி இரவு
9.30 மணிக்கு கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலி, 25ம் தேதி பகல் 12 மணிக்கு ஊர்பி எத் ஓர்பி
செய்தி, 31ம் தேதி மாலை 5 மணிக்கு வத்திக்கான் பசிலிக்காவில் தேதேயும் நன்றி வழிபாடு,
47வது கத்தோலிக்க உலக அமைதி நாளான சனவரி முதல் தேதி காலை 10 மணிக்குத் திருப்பலி, திருக்காட்சி
பெருவிழாவான 6ம் தேதி காலை 10 மணிக்குத் திருப்பலி, 12ம் தேதி ஞாயிறு சிஸ்டீன் சிற்றாலயத்தில்
திருப்பலி மற்றும் குழந்தைகளுக்குத் திருமுழுக்கு ஆகியவை திருத்தந்தையின் திருவழிபாட்டு
நிகழ்ச்சிகளாக வெளியிடப்பட்டுள்ளன.