நவ.21,2013. அன்பு நேயர்களே, திருஅவையில் 2012ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி தொடங்கப்பட்ட
நம்பிக்கை ஆண்டு, வருகிற ஞாயிறன்று நிறைவடைகின்றது. இந்த நம்பிக்கை ஆண்டு தமிழகத்தில்
சிறப்பிக்கப்பட்ட விதம் குறித்து அறிவதற்கு சேலம் ஆயர் மேதகு சிங்கராயன் அவர்களைத் தொலைபேசியில்
தொடர்புகொண்டோம். ஆயர் மேதகு எஸ்.சிங்கராயன் அவர்கள், தமிழக ஆயர் பேரவையின் நற்செய்தி
அறிவிப்புப் பணிக்குழுவின் தலைவர் ஆவார்.