இலங்கை இராணுவத்தின் விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது - டேவிட் கமரூன்
நவ.,21,2013. போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இலங்கை இராணுவம் நடத்தும் விசாரணைகளை
ஏற்றுக்கொள்ள முடியாது என பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். தனது
இலங்கை பயணம் தொடர்பாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
போர்க்குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பிச் செல்ல இலங்கைக்கு இடமளிக்க போவதில்லை
எனவும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை நடத்தும் விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது
எனவும் கமரூன் குறிப்பிட்டுள்ளார்.