இரு குருக்களை சிறையில் வைத்துள்ளது சீனாவின் Qinyuan நகர் காவல்துறை
நவ.,21,2013. சீனாவின் Qinyuan நகரில் முதியோர்களுக்கான மறைக்கல்வி வகுப்புகளை நடத்தியதற்காக
இரு குருக்களை கடந்த மாதம் முதல், தொடர்ந்து சிறையில் வைத்துள்ளது அந்நகர் காவல்துறை. திருத்தந்தைக்கு
விசுவாசமாக இருப்பதால் மறைந்துவாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள சீனக் கத்தோலிக்க திருஅவையின்
இவ்விரு குருக்களுள் ஒருவர் பெயர் அருள்திரு Tian Dalong எனவும், ஏனையவர் பெயர் வெளியிடப்படவில்லை
எனவும் ஆசியா நியூஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. இவர்களுடைய மறைப்பணியில் உதவிபுரிந்ததாகக்
குற்றஞ்சாட்டப்பட்டு நான்கு கத்தோலிக்கப் பொதுநிலையினருக்கு ஏறத்தாழ 400 யூரோக்கள் வீதம்
அபராதம் விதித்துள்ளனர் Qinyuan நகர் அதிகாரிகள். இப்பகுதியில் பல ஆண்டுகளாக ஏறத்தாழ
10 குருக்கள் சிறைவைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.