2013-11-18 16:23:04

நேபாளத்தில் அமைதித் தேர்தல் இடம்பெற அந்நாட்டுக் கிறிஸ்தவர்கள் செபவழிபாடு


நவ.18,2013. இச்செவ்வாயன்று நேபாளத்தில் இடம்பெறும் தேர்தல்களைக் குலைக்க மாவோயிஸ்ட் புரட்சியாளர்கள் எடுத்துவரும் முயற்சிகளை முறியடிக்கும் நோக்கில் அமைதிக்கான செபவழிபாட்டை நடத்தியுள்ளனர் அந்நாட்டுக் கிறிஸ்தவர்கள்.
அமைதிக்கும் பேச்சுவார்த்தைகளுக்கும் அனைத்து தரப்பினரும் முன்வரவேண்டும் என அரசியல் மற்றும் புரட்சிக்குழுத் தலைவர்களுக்கு நேபாளக் கிறிஸ்தவத் தலைவர்கள் அழைப்புவிடுத்ததைத் தொடர்ந்து, ஞாயிறன்று அமைதிக்கான செபவழிபாடுகளில் எண்ணற்ற கத்தோலிக்க மற்றும் பிரிந்த கிறிஸ்தவ சபையினர் கலந்துகொண்டனர்.
தீவிரவாதக் குழுக்கள் முன்வைக்கும் பகைமையையும் வன்முறையையும் கைவிட்டு, அமைதியின் சாட்சிகளாக கிறிஸ்தவர்கள் விளங்கவேண்டும் என நேபாள கிறிஸ்தவத் தலைவர்கள் ஏற்கனவே அழைப்புவிடுத்துள்ள நிலையில், 'அமைதியான தேர்தலுக்கும் புதிய அரசியலமைப்பு உருவாக்கலுக்கும் அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்' என இஞ்ஞாயிறு மறையுரையில் சிறப்பு அழைப்புவிடுத்துள்ளார் நேபாளத்தின் காத்மண்ட் ஆயர் ஆன்டனி ஷர்மா

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.