திருப்பீடத்தின் நிதி ஆய்வு நிர்வாகப் பணிகள் குறித்த திருத்தந்தையின் அறிக்கை
நவ.,18,2013. திருப்பீடத்தில் உருவாக்கப்பட்டுள்ள நிதி ஆய்வு அமைப்பிற்கான புதிய விதிகளை
அங்கீகரித்து Motu Proprio எனும் அறிக்கையை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். இம்மாதம்
15ம் தேதி திருத்தந்தையால் கையெழுத்திடப்பட்டு இத்திங்கள் வெளியிடப்பட்டுள்ள இந்தப் புதிய
விதிகளின் தொகுப்பு இம்மாதம் 21ம்தேதி முதல் அமலுக்கு வருகின்றது. நிதி சார்ந்தவைகளில்
வெளிப்படையான தன்மை, கண்காணிப்பு, நிதி ஆய்வு போன்றவைகளை உள்ளடக்கி ஏற்கனவே இவ்வாண்டு
ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி உருவாக்கட்டுள்ள இவ்விதிகளின் தொகுப்பில், மேலும் சில நிர்வாக
கட்டமைப்புக்களையும் புகுத்தி புதிதாக வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். நிதி
தவறாகப் பயன்படுத்தப்படுவதையும், தீவிரவாத நடவடிக்கைகளுக்குச் செல்வதையும் தடுக்கும்
நோக்கில் 2010ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கொணர்ந்த, புதிய
தொகுப்பின் அடிப்படையிலேயே திருத்தந்தை பிரான்சிஸின் Motu Proprio என்ற இந்த அறிக்கை,
நிர்வாகப்பணி விளக்கங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது.