2013-11-18 16:19:47

ஆன்மீக மருந்தை வாங்கிச் செல்லுமாறு திருப்பயணிகளுக்கு திருத்தந்தை பரிந்துரை


நவ.18,2013. இந்த வளாகத்தில் கூடியிருக்கும் உங்களனைவருக்கும் ஓர் ஆன்மீக மருந்தை பரிந்துரைக்கிறேன், இப்படிச் சொன்னவுடன் திருத்தந்தை ஒரு மருந்து கடைக்காரர் என்று உங்களில் சிலர் நினைக்கலாம், ஆனால் விரைவில் நிறைவடையவிருக்கும் நம்பிக்கை ஆண்டின் பலன்களை உணருவதற்கு இது ஒரு சிறப்பு மருந்து என்று இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரைக்குப் பின்னர் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகள் எல்லாரும் மறக்காமல் இம்மருந்தை வாங்கிச் செல்லுமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ், இது 53 மணிகளைக் கொண்ட ஒரு மருந்து, Misericordina என்றழைக்கப்படும் இந்த ஆன்மீக மருந்து ஒரு டப்பாவில் வைக்கப்பட்டுள்ளது, சில தன்னார்வப் பணியாளர்கள் இதனை விநியோகம் செய்வார்கள் என்று கூறினார்.
இந்த டப்பாவிலுள்ள செபமாலையை வைத்து நீங்கள் இறைஇரக்கத்திடம் செபிக்கலாம், இந்த இறைஇரக்கம், எல்லா இடங்களிலும் அன்பு, மன்னிப்பு, சகோதரத்துவம் ஆகியவற்றைப் பரப்புவதற்கு நம் ஆன்மாவுக்கும் ஆன்மீகத்துக்கும் உதவும் முத்து எனவும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
இந்த மருந்தை வீட்டுக்கு எடுத்துச்செல்ல மறக்க வேண்டாம், ஏனெனில் பிலிப்பைன்சில் இது நம் முழு வாழ்வுக்கும், இதயத்துக்கும் ஆன்மாவுக்கும் நல்லது செய்யும் எனவும் திருத்தந்தை பிரான்சிஸ் இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின்னர் கூறினார்

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.