திருத்தந்தை பிரான்சிஸ் : இயேசுவின் காயங்களில் நாம் அவரின் கருணையை அனுபவிக்கிறோம்
நவ.16,2103. இயேசுவின் கருணையை நாம் அனுபவிக்கும்பொருட்டு அவர் தம் காயங்களைப் பாதுகாத்து
வைக்க ஆவல் கொண்டிருந்தார். இதுவே நமது பலம் மற்றும் நமது நம்பிக்கை என, இச்சனிக்கிழமையன்று
தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். இலத்தீன், அரபு உட்பட
தினமும் ஏறக்குறைய ஒன்பது மொழிகளில் @Pontifex என்ற தனது டுவிட்டரில் எழுதிவரும் திருத்தந்தை
பிரான்சிஸ், இயேசுவின் கருணையை தனது உரைகளிலும் டுவிட்டரிலும் அடிக்கடி நமக்கு நினைவுபடுத்தி
வருகிறார் என்பது கவனிக்கத்தக்கது.