திருத்தந்தை பிரான்சிஸ் : இளையோரே, எப்பொழுதும் நற்செய்தியின் மறைபோதகர்களாக இருங்கள்
நவ.15,2013. அன்பு இளையோரே, ஒவ்வொரு நாளும், எல்லா இடங்களிலும் எப்பொழுதும் நற்செய்தியின்
மறைபோதகர்களாகத் திகழுங்கள் என இவ்வெள்ளிக்கிழமை தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார்
திருத்தந்தை பிரான்சிஸ். தினமும் ஏறக்குறைய ஒன்பது மொழிகளில் டுவிட்டரில் எழுதிவரும்
திருத்தந்தை பிரான்சிஸ், நம்பிக்கை ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாள்களே இருக்கும் இவ்வேளையில்,
அனைவரும், குறிப்பாக, இளையோர் நற்செய்தியின் மறைபோதகர்களாக இருக்குமாறு கேட்டுள்ளார். மேலும்,
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் பேரருள்திரு
Fernando Vérgez Alzaga அவர்களை ஆயராகத் திருநிலைப்படுத்தும் திருப்பலி இவ்வெள்ளிக்கிழமை
மாலை 4.30 மணிக்கு இடம்பெறும் என்பது அவரது இந்நாளைய நிகழ்ச்சிகளில் ஒன்றாக உள்ளது. பேரருள்திரு
Vérgez Alzaga, வத்திக்கான் நகர நாட்டின் நிர்வாகப் பொதுச்செயலராக இவ்வாண்டு ஆகஸ்ட் 30ம்
தேதியன்று நியமனம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.