நவ.14,2013. அன்பு நேயர்களே, இலங்கைத் தலைநகர் கொழும்புவில் இவ்வெள்ளியன்று காமன்வெல்த்
நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாடு தொடங்கவுள்ளது. இதில் கலந்து கொள்ளவிருக்கும் பிரித்தானிய
இளவரசர் சார்லஸ், இன்னும் பிற காமன்வெல் தலைவர்கள் இப்புதனன்று இலங்கையின் மட்டக்களப்புக்குச்
செல்லவிருந்தனர். ஆனால் இவர்களின் மட்டக்களப்புப் பயணம் கடைசி நேரத்தில் திடீரென இரத்து
செய்யப்பட்டது. இதையொட்டி மட்டக்களப்பு ஆயர் மேதகு ஜோசப் பொன்னைய்யா அவர்களோடு இப்புதனன்று
தொலைபேசியில் பேசினோம்.