2013-11-14 16:11:21

திருத்தந்தை பிரான்சிஸ் : கடவுளின் படைப்பையும் ஏழைகளையும் பராமரிக்கவேண்டியது நமது கடமை


நவ.14,2013. 'கடவுளின் படைப்பைக் கவனமுடன் பராமரியுங்கள். ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக, உதவி தேவைப்படும் நிலையிலுள்ள மக்களைப் பராமரியுங்கள்' என இவ்வியாழனன்று தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இறைவன் படைத்த இயற்கையையும், அவரின் உன்னதப் படைப்பான மனித குலத்தில் துன்புறுவோரையும் பராமரிக்க வேண்டிய ஒவ்வொரு மனிதரின் கடமையை தன் டுவிட்டரில் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.