2013-11-13 15:02:40

பேராயர் Zimowski தலைமையில் புதன் பொது மறைபோதகத்தில் மூவாயிரம் நோயாளிகள்


நவ.13,2013. இப்புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில் பல்வேறு வகையான நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த மூவாயிரம் பேரைச் சந்தித்து கட்டித்தழுவி முத்தம் கொடுத்து ஆசீர்வதித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நோயாளிகள்மீது காட்டும் பரிவு மற்றும் அக்கறைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, திருப்பீட நலவாழ்வுத்துறை தலைவர் பேராயர் Zygmunt Zimowski தலைமையில் இந்நோயாளிகள் இப்புதன் பொது மறைபோதகத்தில் கலந்து கொண்டனர்.
இன்னும், ஈராக்கில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதன் 10ம் ஆண்டை இப்புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில் நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ், Nassiryaவில் பயங்கரவாதத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட 140 குடும்ப உறுப்பினர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.