2013-11-11 15:29:44

பிலிப்பீன்ஸில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருத்தந்தையின் ஒருமைப்பாட்டுச் செய்தி


நவ.11,2013. பிலிப்பீன்ஸின் புயலால் பாதிக்கப்பட்ட அனைவருடனும் திருத்தந்தை பிரான்சிஸ் தன் ஒருமைப்பாட்டை தெரிவிப்பதாக திருத்தந்தையின் பெயரால் பிலிப்பீன்ஸ் அரசுத்தலைவருக்கு இரங்கல் தந்திச்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருப்பீடச்செயலர் பேராயர் Pietro Parolin.
தங்களுக்கு மிக நெருக்கமானவர்களை இழந்து துடிக்கும் மக்களுக்கும், உறைவிடங்களை இழந்துள்ள ம்க்களுக்கும் திருத்தந்தை தன் ஆழந்த அனுதாபங்களை வெளியிடுவதாகக் கூறும் திருப்பீடச் செயலரின் செய்தி, பிலிப்பீன்ஸ் மக்களுக்காக திருத்தந்தை தொடர்ந்து செபித்துவருவதாகவும் தெரிவிக்கிறது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிவரும் அரசு அதிகாரிகளுக்கும், துயர்துடைப்புப் பணியாளர்களுக்கும் திருத்தந்தை தன் ஊக்கத்தை வழங்குவதாகவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.