2014ம் ஆண்டு உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்திற்கானத் தயாரிப்பு ஏடு
நவ.05,2013. 2014ம் ஆண்டு அக்டோபர் 5 முதல் 19 வரை வத்திக்கானில் நடைபெறவிருக்கும் உலக
ஆயர்கள் சிறப்பு மாமன்றத்திற்கானத் தயாரிப்பு ஏட்டை இச்செவ்வாய்க்கிழமையன்று வெளியிட்டுள்ளது
திருப்பீடம் "நற்செய்தி அறிவிப்புச் சூழலில் குடும்பத்தின் மேய்ப்புப்பணி சவால்கள்"
என்ற தலைப்பில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்திற்கானத் தயாரிப்பு ஏடு,
குடும்பமும் நற்செய்தியும்; குடும்பம் பற்றி திருஅவையும் நற்செய்தியும்; குடும்பம் குறித்த
திருஅவையின் போதனைகள் போன்ற தலைப்புகளைக் கொண்டுள்ளது. மேலும், திருமறை நூல்களிலும்
திருஅவையின் ஆசிரிய வெளியீடுகளிலும் திருமணம் குறித்து சொல்லப்பட்டிருப்பவை; இயற்கைச்
சட்டத்தின்படி திருமணம்; நற்செய்தி அறிவிப்பில் மேய்ப்புப்பணி அக்கறை; ஒரே பாலினச் சேர்க்கையாளர்கள்;
முறைகேடான திருமணங்களில் குழந்தைகளின் கல்வி; திருமணமான தம்பதியர் வாழ்வுக்குத் திறந்தமனதுடையவர்களாய்
இருத்தல்; சில இக்கட்டான சூழல்கள் போன்ற தலைப்புக்களில் கேள்விகளும் இவ்வேட்டில் உள்ளன. பிற
சவால்கள் மற்றும் பரிந்துரைகளும் வரவேற்கப்படுவதாக இத்தயாரிப்பு ஏட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலக
ஆயர்கள் சிறப்பு மாமன்றத்திற்கானத் தயாரிப்பு ஏட்டை, இம்மாமன்றத்தின் பொதுத் தொடர்பாளர்
புடாபெஸ்ட் கர்தினால் Péter Erdő அவர்களின் தலைமையிலான குழு இச்செவ்வாயன்று நிருபர் கூட்டத்தில்
வெளியிட்டது.