நவ.02,2013. விசுவாசிகள் ஒவ்வொருவரும் புனிதராவதற்கான வேட்பாளர்கள் என்று, திருஅவையின்
தூயவர்கள் விழா நாளன்று கூறினார் பிலிப்பீன்ஸ் அருள்பணியாளர் ஒருவர். தூயவர்கள் இந்நிலையை
அடைவதற்கு முன்னர் அவர்கள் சாதாரண மனிதர்களாகப் பிறந்தவர்கள் என்றும், சுருங்கச்சொல்லின்
நாம் அனைவருமே தூயவர்களாக மாறுவதற்கான வேட்பாளர்கள் என்றும் Antipolo பங்குத் தந்தை
அருள்பணி Jun Meneses கூறினார். தூயவர்கள், உண்டார்கள், சிரித்தார்கள், பிரச்சனைகள்
குறித்து கவலைப்பட்டார்கள், சாதாரண மக்கள் சந்திக்கும் ஒவ்வொன்றையும் அனுபவித்தார்கள்
என்று மறையுரையாற்றிய அருள்பணி Jun Meneses, துறவு இல்லங்களைச் சுத்தம் செய்தவர்கள்,
கோழிகளையும் பன்றிகளையும் பராமரித்தவர்கள்.. இப்படி சாதாரண வேலை செய்த அருள்சகோதரிகளும்,
அருள்பணியாளர்களும் தூயவர்களாக உயர்த்தப்பட்டுள்ளனர் என்றும் கூறினார் இத்தூயவர்கள்
கடவுளை அடைவதற்கு இன்னல்நிறைந்த குறுகிய பாதையைத் தெரிவு செய்தனர், இதனை நாமும் செய்யலாம்,
புனித வாழ்வுக்கான கடவுளின் அழைப்புக்கு முதலில் நாம் பதில் சொல்ல வேண்டுமென்றும் அக்குரு
கேட்டுக்கொண்டார்.