நவ.02,2013. தீமைக்கு எதிரான போராட்டம் நீண்டது மற்றும் கடினமானது. எனவே, பொறுமையுடன்
இடைவிடாமல் செபிக்கவேண்டியது இன்றியமையாதது என்று தன் டுவிட்டர் பக்கத்தில் இச்சனிக்கிழமையன்று
எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். இலத்தீன், அராபியம் உட்பட திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்களின் டுவிட்டர் செய்தி ஏறத்தாழ தினமும் ஒன்பது மொழிகளில் வெளியிடப்படுகின்றது. மேலும்,
2012ம் ஆண்டு அக்டோபர் இறுதி வாரத்திலிருந்து 2013ம் ஆண்டு அக்டோபர் இறுதி வாரம்வரை இறந்த
அனைத்துக் கர்தினால்கள், பேராயர்கள் மற்றும் ஆயர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக, நவம்பர்
4, வருகிற திங்களன்று வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருப்பலி நிகழ்த்தவுள்ளார்
திருத்தந்தை பிரான்சிஸ். 2013ம் ஆண்டு ஜூலை 19ம் தேதி இறந்த மும்பையின் முன்னாள்
பேராயர் கர்தினால் சைமன் பிமென்ட்டா உட்பட 9 கர்தினால்கள் இவ்வாண்டில் இறந்துள்ளனர்.