நம்பிக்கை ஆண்டின் இறுதி நாட்களில், திருப்பீட பிறரன்பு அவையும், ஐரோப்பிய ஆயர் பேரவையும்
இணைந்து நடத்தும் கூட்டம்
அக்.30,2013. நம்பிக்கை ஆண்டின் இறுதி நாட்களை நெருங்கிவரும் வேளையில், 'ஒரே இதயம்' என்ற
பொருள்படும் 'Cor Unum' என்ற திருப்பீட பிறரன்பு அவையும், ஐரோப்பிய ஆயர் பேரவையும் இணைந்து,
இத்தாலியில் கூட்டம் ஒன்றை நடத்தத் தீர்மானித்துள்ளன. இத்தாலியின் Trieste எனுமிடத்தில்,
நவம்பர் 4ம் தேதி முதல் 6ம் தேதி முடிய நடைபெறும் இக்கூட்டத்தில், பிறரன்புப் பணிகளை
இன்னும் அதிகப் பொறுப்புணர்வுடன் மேற்கொள்ள திருஅவை சந்திக்கும் சவால்கள் குறித்து பேசப்படும்
என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Cor Unum அவையின் தலைவரான கர்தினால் Robert Sarah அவர்களும்,
ஐரோப்பிய ஆயர் பேரவையின் துணைத் தலைவரும், Genoa பேராயருமான கர்தினால் Angelo Bagnasco
அவர்களும், இக்கூட்டத்தில் சிறப்புரைகள் வழங்குவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.