திருத்தந்தை : நம்பிக்கை என்பது அனைத்தையும் மனமகிழ்வுடன் உற்றுநோக்கி முன்னோக்கிச் செல்வதாகும்
அக்.,29,2013. நம்பிக்கை என்பது எதிலும் நற்கூறேக்காணும் இனிய மனவளம் அல்ல, அது அனைத்தையும்
மனமகிழ்வுடன் உற்றுநோக்கி முன்னோக்கிச் செல்வதாகும் என இச்செவ்வாய்க்கிழமையன்று புனித
மார்த்தா சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ். நம்பிக்கை
என்பதை புரிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல என்ற திருத்தந்தை, மூன்று புண்ணியங்களுள் மிகவும்
தாழ்ச்சியுடையதான இது, நம் வாழ்வுக்குள்ளேயே மறைந்திருப்பது மட்டுமல்ல, பெருநட்டத்தையும்
கொணரவல்ல ஒரு புண்ணியம் என்றார். நாம் நம் இதயத்தை பெருங்கடலின் கரையில் நங்கூரமிட்டுள்ளோமா
அல்லது, நம் ஆசைகள், குணநலன்கள், நம் சட்டவரைமுறைகள், நம் சுகங்கள் ஆகியவற்றைக் கொண்டு
நாமே உருவாக்கிய ஏரியில் நங்கூரமிட்டுள்ளோமா என்பது குறித்து நாம் ஒவ்வொருவரும் சிந்திக்கவேண்டிய
நேரமிது எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். எந்த நம்பிக்கையால் நாம் மீட்கப்பட்டோமோ
அந்த நம்பிக்கையால் நாம் வாழ்வது, மற்றது, நல்ல கிறிஸ்தவர்களாக நாம் வாழ்வது என்பவை பற்றி
எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவெளிப்பாட்டிற்கான காத்திருப்பில் வாழ்தல்
அல்லது இறைச்சட்டங்களின் துணைகொண்டு வாழ்தல் ஆகியவைகள் பற்றியும் தன் மறையுரையில் வலியுறுத்திக்
கூறினார்.