2013-10-29 16:00:55

அடிமைக் குழந்தைகளின் விடுதலைக்காக உழைத்துவருக்கு அன்னை தெரெசா விருது


அக்.,29,2013. சூடானிலும் உகாண்டாவிலும் குழ்ந்தைகள் அடிமைகளாக நடத்தப்படுவதற்கு எதிராகப் போராடிவரும் அமெரிக்க கிறிஸ்தவரான Sam Childers அவர்களுக்கு, இவ்வாண்டின் அன்னை தெரசா விருது வழங்கப்பட்டுள்ளது.
மும்பையில் இடம்பெற்ற விழாவில் இவ்விருதை, Harmony என்றழைக்கப்படும் அமைப்பிடமிருந்து பெற்றபோது உரையாற்றிய Childers அவர்கள், அன்னை தெரசாவின் பாதையைப் பின்பற்றும் தான், சூடானிலும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் துன்புறும் சிறார்களின் சார்பாக இவ்விருதை ஏற்றுக்கொள்வதாகக் கூறினார்.
துவக்கக் காலத்தில் போதைப்பொருட்களுக்கு அடிமையாகி, வன்முறைகளை ஆதரித்து வந்த Childers அவர்கள், மனம் மாறி கிறிஸ்தவத்தை தழுவிய பின்னர், கடந்த 13 ஆண்டுகளாக ஆப்ரிக்காவில், குறிப்பாக, சூடான் மற்றும் உகாண்டாவில் அடிமைக் குழந்தைகளின் விடுதலைக்காக உழைத்து வருகிறார்.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.