அக்.,28,2013. தன் டுவிட்டர் பக்கத்தில் தினமும் வெளியிடும் செய்திகளை வாசிப்பவர்களின்
எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது குறித்து தன் நன்றியை வெளியிட்டு இஞ்ஞாயிறன்று
டுவிட்டர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். 'டுவிட்டரில் என்னைப்
பின்பற்றுபவர்களே! உங்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது என்பதை அறிவேன். என்
முழு இதயத்தோடு உங்களுக்கு நன்றி கூறுவதோடு, எனக்காகத் தொடர்ந்து செபிக்குமாறும் உங்களை
வேண்டுகிறேன்' என தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை. மேலும், 'நாம்
அனைவரும் பாவிகளே. ஆனால் இறைவன் தன் அபரிவிதமான அருள், இரக்கம் மற்றும் இன்கனிவு மூலம்
நம்மைக் குணப்படுத்துகிறார்' என இத்திங்களன்று திருத்தந்தை தன் டுவிட்டர் பக்கத்தில்
எழுதியுள்ளார்.