இயேசு நமக்காகத் தந்தையிடம் பரிந்து பேசுகிறார் என்பது, நம்பிக்கை தரும் ஓர் உண்மை -
திருத்தந்தை
அக்.28,2013. தந்தையோடு இருக்கும் இயேசு, திருத்தூதர்களுடன் இருக்கும் இயேசு, மக்களோடு
இருக்கும் இயேசு என்ற மூன்று கண்ணோட்டங்களின் அடிப்படையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்
இத்திங்களன்று தன் மறையுரையை வழங்கினார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் வாழ்ந்துவரும்
புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், ஒவ்வொருநாளும் காலை 7 மணிக்கு, திருப்பலியாற்றி,
மறையுரையும் வழங்கிவருகிறார். இத்திங்களன்று கொண்டாடப்பட்ட திருத்தூதர்களான புனித
சீமோன், யூதா ஆகியோரின் திருநாளையொட்டி வழங்கப்பட்ட நற்செய்தியின் (லூக்கா 6: 12-16)
அடிப்படையில் திருத்தந்தை தன் மறையுரையை வழங்கினார். இயேசு இவ்வுலகில் வாழ்ந்தபோது,
தான் தேர்ந்தெடுத்தத் திருத்தூதர்களுக்காகவும், தன் சமுதாய மக்களுக்காகவும், தந்தையாம்
இறைவனிடம் மன்றாடியதுபோல், இன்னும் தொடர்ந்து நம் ஒவ்வொருவருக்காகவும் மன்றாடி வருகிறார்
என்பதை, தன் ம்ரையுரையில் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை. தம் பாடுகள், காயங்கள்
வழியாக நம்மை மீட்ட இறைமகன் இயேசு, தற்போது உன்னத மகிமையில் இருந்தாலும், நமக்காகத் தொடர்ந்து
தந்தையிடம் பரிந்துபேசுகிறார் என்பது, நமக்கு நம்பிக்கை தரும் ஓர் உண்மை என்று திருத்தந்தை
எடுத்துரைத்தார்.