2013-10-28 15:38:57

ஆங் சான் சூ கி மற்றும் உலக வங்கித் தலைவரை திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை


அக்.,28,2013. இத்திங்களன்று, திருப்பீடத்தில் மியான்மார் மக்கள் தலைவர் Aung San Suu Kyi மற்றும் உலக வங்கியின் தலைவர் Jim Yong Kim ஆகியோரைத் தனித்தனியே சந்தித்து உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
1991ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதுபெற்ற மியான்மார் எதிர்க்கட்சித்தலைவர் Suu Kyiயுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்ட இச்சந்திப்பு 20 நிடங்கள் நீடித்தது.
இதே நாளில் திருப்பீடத்திற்கான ஜப்பான நாட்டுத் தூதராகப் பொறுப்பேற்கும் Teruaki Nagasakiயிடமிருந்து நம்பிக்கைச் சான்றிதழ்களைப் பெற்ற வைபவத்திலும், திருப்பீடத்திற்கான தூதர் பணியை நிறைவுசெய்து செல்லும் அல்பேனியத்தூதுவர் Rrok Logu அவர்களின் வழியனுப்பு விழா வைபவத்திலும் கலந்துகொண்டார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.