2013-10-26 16:42:13

திருத்தந்தையுடன் பானமா அரசுத்தலைவர் சந்திப்பு


அக்.,26,2013. பானமா அரசுத்தலைவர் Ricardo Alberto Martinelli Berrocalஅவர்களுக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கும் இடையே, இச்சனிக்கிழமையன்று காலை திருப்பீடத்தில் சந்திப்பு இடம்பெற்றது.
திருத்தந்தையுடன் நிகழ்ந்த இச்சந்திப்பிற்குப்பின், நாடுகளிடையேயான உறவுகளுக்கான திருப்பீடத்துறையின் செயலர் பேராயர் தொமினிக் மம்பெர்த்தி அவர்களையும் சந்தித்து உரையாடினார் பானமா அரசுத்தலைவர்.
திருப்பீடத்தில் அரசுத்தலைவர் நடத்திய சந்திப்பில், வத்திக்கானுக்கும் பானமா நாட்டிற்கும் இடையேயான நல்லுறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அரசுத்தலைவரும் திருத்தந்தையும் நினைவுப் பரிசுகளைப் பரிமாறிக்கொண்டபின், வத்திக்கான தோட்டத்தில் வைப்பதற்கென பானமா அரசுத்தலவர், La Antigua மரியன்னை திருஉருவச்சிலையை வழங்கியுள்ளதற்கு திருத்தந்தையால் நன்றியும் தெரிவிக்கப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.