'உலகளாவிய பாராமுகம்' குறித்த திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி
அக்.,26,2013. ‘பிறரைக்குறித்துக் கவலைப்படாத பாராமுகம் என்பது உலகமயமாக்கப்பட்டிருப்பதில்
நாமும் மிக அதிக வேளைகளில் பங்குபெற்றுள்ளோம். அதற்குப் பதிலாக நாம், உலகளாவிய ஒருமைப்பாட்டு
உணர்வுக்கு முயல்வோமாக' என தன் டுவிட்டர் பக்கத்தில் இச்சனிக்கிழமையன்று எழுதியுள்ளார்
திருத்தந்தை பிரான்சிஸ். இதே நாளில் திருப்பீடச்செயலகமும் தன் டுவிட்டர் பக்கத்தில்
'நம் உலகம் ஒன்றையொன்று சார்ந்துள்ளது, மற்றும், ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்துள்ளது எனபதை
நினைவில்கொண்டு, உலகளாவிய பாராமுகத்தை ஒதுக்கிவைப்போம்’ என எழுதியுள்ளது.