திருப்பீடத்தின் நலப்பணியாளர் அவையைச் சேர்ந்த 80 பேர், இத்திங்கள்
முதல், புனித பூமியில் திருப்பயணம்
அக்.23,2013. திருப்பீடத்தின் நலப்பணியாளர் அவையைச் சேர்ந்த 80 பேர், இத்திங்கள் முதல்,
புனித பூமியில் திருப்பயணம் மேற்கொண்டுள்ளனர். கார்மேல் மலை, மலைப்பொழிவு நிகழ்ந்த
குன்று, கப்பர்நாகும், நாசரேத் ஆகிய இடங்களைத் தரிசித்து வந்துள்ள இக்குழுவினருடன், அக்டோபர்
25, வருகிற வெள்ளிக்கிழமையன்று, இத்திருப்பீட அவையின் தலைவர், பேராயர் Zygmunt Zimowski
அவர்கள் இணைத்து திருப்பயணம் மேற்கொள்கிறார். 2016ம் ஆண்டு நடைபெறவிருக்கும் அகில
உலக நோயுற்றோர் நாள், நாசரேத்தில் நிகழவிருப்பதையொட்டி இத்திருப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. திருப்பீட
நலப்பணியாளர் அவையின் இத்திருப்பயணம், அக்டோபர் 27, வருகிற ஞாயிறன்று நிறைவு பெறுகிறது.