அக்.22,2013. 'தோற்கடிக்கப்பட்டதையோ, தோல்வியையோ குறித்து நிற்பதல்ல சிலுவை, மாறாக, பாவத்தையும்
தீமையையும் வெற்றிகொள்ளும் அன்பை அது வெளிப்படுத்தி நிற்கிறது' என தன் டுவிட்டர் பக்கத்தில்
இச்செவ்வாய்க்கிழமையன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். ஒவ்வொருநாளும் தன்
டுவிட்டர் பக்கத்தில் தன் குறுஞ்செய்திகளை மக்களோடு பகிர்ந்துவரும் திருத்தந்தை, இச்செவ்வாயன்று,
சிலுவை நமக்கு வெளிப்படுத்தும் செய்தி குறித்து எழுதியுள்ளார். ஆங்கிலம், இலத்தீன்,
இத்தாலியம், ஸ்பானியம், அரேபியம் ஆகிய மொழிகள் உட்பட, ஒன்பது மொழிகளில் @pontifex என்ற
இணைய முகவரி வழியாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்திகளை வெளியிட்டு
வருகிறார்.