கடவுளை அறிந்துகொள்ள, அவரிடமேச் செல்ல வேண்டும், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி
அக்.,21,2013. 'நாம் கடவுளை அறிந்துகொள்ள விரும்பினால் நாம் அவரிடம் செல்லவேண்டும். நற்கருணைப்
பேழையின்முன் அமைதியில் அவருக்குச் செவிமடுப்பதுடன், திருவருள் சாதனங்களில் அவரை அணுகுவோம்',
என தன் டுவிட்டர் பக்கத்தில் இத்திங்களன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள். இதே
திங்கள்கிழமையன்று காலை திருப்பீடத்தில், வத்திக்கானுக்கான அமெரிக்க ஐக்கியநாட்டின் புதியத்
தூதுவர் Kenneth Francis Hackett இடமிருந்து நம்பிக்கைச் சான்றிதழ்களை பெற்றுக்கொண்டார்
திருத்தந்தை பிரான்சிஸ்.