ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு திருத்தந்தையின் ஆறுதல் செய்தி
அக்.,21,2013. ஆஸ்திரேலியாவின் New South Wales பகுதியில் இடம்பெற்ற காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட
மக்களுக்கு ஆறுதல் கூறும் இரங்கல்தந்தி ஒன்றை திருத்தந்தையின் பெயரால் ஆஸ்திரேலிய ஆயர்பேரவைக்கு
அனுப்பியுள்ளார் புதியத் திருப்பீடச் செயலர் பேராயர் Pietro Parolin. இந்தக் காட்டுத்தீயால்
உயிரிழந்தவர்களுக்கும், இதனால் உறைவிடங்களை இழந்தவர்களுக்கும் தன் செபத்தையும் ஆறுதலையும்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்குவதாகக் கூறும் இத்தந்திச்செய்தி, தீயை அணைப்பதில்
தொடர்ந்து உழைத்துவரும் பணியாளர்களுக்கு தன் ஊக்கத்தை வழங்குவதாகவும் கூறுகிறது. ஆஸ்திரேலியாவில்
காட்டுத்தீவிபத்தால் பாதிக்கப்பட்ட அனைவருடனும் ஒருமைப்பாட்டை அறிவிப்பதோடு தன் ஆசீரையும்
திருத்தந்தை வழங்குவதாக திருப்பீடச்செயலர் பேராயர் பரோலினின் அவர்கள் அனுப்பியுள்ள தந்திச்செய்தியில்
மேலும் கூறப்பட்டுள்ளது.