2013-10-18 16:25:19

தீமையின் முன்னர் நாம் பின்வாங்கக் கூடாது, திருத்தந்தை பிரான்சிஸ்


அக்.18,2013. தீமையின் முன்னர் நாம் பின்வாங்கக் கூடாது, கடவுள் அன்பானவர், கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்ப்பு வழியாக அவர் தீமையைத் தோற்கடித்தார் என, தனது டுவிட்டரில் இவ்வெள்ளியன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், Ghana நாட்டுக்குத் திருப்பீடத் தூதராக கடந்த ஆகஸ்ட் 17ம் தேதியன்று நியமனம் செய்யப்பட்டுள்ள பேரருள்திரு JEAN-MARIE SPEICH அவர்களையும், திருப்பீடத் தூதர் மற்றும் பாப்பிறை திருஆட்சி நிறுவனத்தின் தலைவராக, கடந்த செப்டம்பர் 21ம் தேதியன்று நியமனம் செய்யப்பட்டுள்ள பேரருள்திரு GIAMPIERO GLODER அவர்களையும் இம்மாதம் 24ம் தேதி பேராயர்களாக திருப்பொழிவு செய்யவுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இன்னும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உள்ளிட்ட திருப்பீடத் தலைமையகத்தில் பணியாற்றும் கர்தினால்களின் 2014ம் ஆண்டின் தியானம், உரோமுக்கு வெளியே அல்பானோ நகரில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உரோமுக்கு தென்கிழக்கே ஏறக்குறைய 15 மைல்கள் தூரத்தில் அமைந்துள்ள அல்பானோவின் விண்ணகப் போதகர் இல்லத்தில் 2014ம் ஆண்டு மார்ச் 9ம் தேதியிலிருந்து 14ம் தேதிவரை இத்தியானம் நடைபெறும்.
இந்த ஆண்டு தியானம் வழக்கமாக வத்திக்கானில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.