அக்.17,2013. அன்பு நேயர்களே, இயேசு சபை அருள்தந்தை மைக்கிள் அமலதாஸ் அவர்கள், சென்னை
லொயோலா கல்லூரியில் இயங்கிவரும் பண்பாட்டு, பல்சமய உரையாடல் மையத்தின்(IDCR) இயக்குனர்.
இம்மையம், அண்மையில் லொயோலா கல்லூரி வளாகத்தில் "என் மத நம்பிக்கையைப் பகிர்ந்துகொள்ளாத
அயலவரும் நானும்" என்ற தலைப்பில் பல் சமய உரையாடல் கருத்தரங்கு ஒன்றை நடத்தியது. இக்கருத்தரங்கில்
தலைசிறந்த இறையியல் அறிஞரான அருள்தந்தை மைக்கிள் அமலதாஸ் அவர்கள் கத்தோலிக்க கண்ணோட்டத்தில்
உரையாடலின் தேவைகள் குறித்து உரையாற்றினார். இக்கருத்தரங்கு குறித்தும், அம்மையத்தின்
பல்சமய உரையாடல் பணிகள் குறித்தும் இன்று கேட்போம்.