வத்திக்கானில் அக்.12, 13 மரியா தினக் கொண்டாட்டங்கள்
அக்.08,2013. கத்தோலிக்கத் திருஅவையில் சிறப்பிக்கப்பட்டுவரும் நம்பிக்கை ஆண்டின் ஒரு
நிகழ்வாக, இம்மாதம் 12, 13 தேதிகளில், அதாவது, வருகிற சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும்
மரியா நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது. வருகிற சனிக்கிழமை உரோம் நேரம் மாலை 5 மணிக்கு
வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் மரியா
வழிபாடு நடைபெறும். வருகிற ஞாயிற்றுக்கிழமையன்று உரோம் நேரம் காலை 10.30 மணிக்கு வத்திக்கான்
புனித பேதுரு வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பலி நிகழ்த்துவார். இந்நிகழ்வுகள்
இத்தாலிய மொழியில் நேரடி ஒலிபரப்பு செய்யப்படும்.