அக்.07,2013. 'மனித குலத்தையும் உலகையும் பாவத்திலிருந்தும் தீமைகளிலிருந்தும் காப்பாற்றவல்ல
உண்மையான சக்தி, கருணையே' என்று இத்திங்களன்று தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார்
திருத்தந்தை பிரான்சிஸ். @Pontifex என்ற தனது டுவிட்டர் பக்கத்தில் தினமும் ஒன்பது
மொழிகளில் எழுதிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கருணையின் சக்தி குறித்துச் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், 'மில்லேனியம் வளர்ச்சி நோக்குகள் அனைத்துலக அளவில் வெற்றியடையவில்லை என்பதை
நாம் புரிந்துகொள்வது கடினமல்ல' என்று, திருப்பீடச் செயலகம், @terzaloggia என்ற தனது
டுவிட்டர் பக்கத்தில் இத்திங்களன்று எழுதியுள்ளது.