2013-10-07 16:24:42

Lesotho மன்னர் திருத்தந்தையுடன் சந்திப்பு


அக்.07,2013. இத்திங்கள் காலை திருப்பீடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து உரையாடினார் Lesotho மன்னர் மூன்றாம் Letsie.
தன் மனைவி Mastenate Mohato Seeisoவுடன் இணைந்து திருத்தந்தையைச் சந்தித்த பின்னர், திருப்பீடச்செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, நாடுகளுடன் ஆன உறவுகளுக்கான திருப்பீட அவையின் செயலர் பேராயர் தொமினிக் மம்பெர்த்தி ஆகியோரையும் சந்தித்து பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டார் மன்னர் மூன்றாம் Letsie.
திருப்பீடத்திற்கும் Lesotho முடியரசுக்கும் இடையே நிலவும் நல்லுறவு, அந்நாட்டில் மதிக்கப்படும் மதசுதந்திரம், அரசுக்கும் தலத்திருஅவைக்கும் இடையேயான ஒத்துழைப்பு, பிறர்நலம், நீதி, அமைதி போன்றவைகளில் தலத்திருஅவையின் பங்களிப்பு போன்றவை இப்பேச்சுவார்த்தைகளின்போது விவாதிக்கப்பட்டன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.