2013-10-05 15:08:01

திருத்தந்தை பிரான்சிஸ் : இயேசுவை அறிவதிலிருந்து கிடைக்கும் அகமகிழ்ச்சியை அருள்சகோதரிகள் வெளிப்படுத்த வேண்டும்


அக்.05,2013. இயேசுவை அறிவதிலிருந்து கிடைக்கும் மகிழ்ச்சியையும் மனிதத்தையும் அருள்சகோதரிகள் வெளிப்படுத்த வேண்டுமென்று கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அசிசி நகரில் இவ்வெள்ளியன்று மாலையில் ஏழைகளின் புனித கிளாரா அடைபட்ட துறவு சபை அருள்சகோதரிகளைச் சந்தித்து உரையாற்றியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அருள்சகோதரிகள், இயேசுவோடு செபமும் தபமும் செய்து அவரைத் தியானிக்கும் வாழ்வில் இவர்களின் மனிதம் வளர்கிறது என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், அடைபட்ட துறவு சபை அருள்சகோதரிகள் தாய்த் திருஅவை போன்ற பெரிய மனித சமுதாயத்தைக் கொண்டிருக்க அழைக்கப்பட்டுள்ளார்கள் என்று கூறினார்.
மகிழ்ச்சியிலும், அதிகமான மகிழ்ச்சியிலும் சகோதரிகள் தங்களை வெளிப்படுத்த வேண்டும், சோகமாக இருக்கும் ஓர் அருள்சகோதரியைப் பார்க்கும்போது தனக்கு வருத்தமாக இருக்கும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
இச்சந்திப்பின் இறுதியில் ஒவ்வோர் அருள்சகோதரியையும் வாழ்த்தினார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.