பாகிஸ்தானின் சிறுபான்மை மதத்தவரைக் காக்க அந்நாட்டு பிரதமரிடம் வேண்டுகோள்
அக்.04,2013. பாகிஸ்தானில் கிறிஸ்தவர்களையும் ஏனைய சிறுபான்மை மதத்தவரையும் காக்கவேண்டிய
கடமையை வலியுறுத்தி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது உலகக் கிறிஸ்தவ சபைகளின் அவை. பாகிஸ்தான்
பிரதமர் Nawaz Sharif அவர்களுக்கு WCC என்ற உலக கிறிஸ்தவ சபைகள் அவையின் பொதுச்செயலர்
பாஸ்டர் Olav Fykse Tveit அவர்கள் அனுப்பியுள்ளக் கடிதத்தில், பாகிஸ்தானில் மதத்தீவிரவாதம்
பெருகிவருவது குறித்து தன் கவலையை வெளியிட்டுள்ளார். எல்லா சிறுபான்மை மதத்தவர்களையும்
தீவிரவாத தாக்குதல்களிலிருந்து காப்பாற்றவேண்டிய அரசின் கடமையும் அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.