2013-10-04 16:54:53

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வாழ்வு சாட்சியம் தன்னைக் கவர்ந்துள்ளதாக அமெரிக்க அரசுத்தலைவர்


அக்.04,2013. ஆன்மீகத் தலைவராக விளங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, குறிப்பாக, அவரின் அன்பு, தாழ்ச்சி, ஏழைகள் மீதான பற்று ஆகியவற்றிற்காக அவரை வெகுவாகப் பாராட்டுவதாகத் தெரிவித்தார் அமெரிக்க அரசுத்தலைவர் Barack Obama.
தன் வாழ்வு மூலம் திருத்தந்தைக் காட்டிவரும் சாட்சியமே தன்னை பெரிய அளவில் கவர்ந்துள்ளதாக CNBC என்ற செய்தி நிறுவனத்திற்கு அளித்தப் பேட்டியில் உரைத்த அமெரிக்க அரசுத்தலைவர் ஒபாமா, கிறிஸ்துவின் படிப்பினைகளுக்கு இயைந்தவகையில் தன் வாழ்வை அமைத்துக்கொண்டுள்ள ஒருவரை நேரடியாகக் காணமுடிகிறது என்றார். ஏழைகள் மீது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கொண்டுள்ள அன்பை அவரின் வார்த்தைகளில் மட்டுமல்ல, அவரின் செயல்பாட்டிலும் காணமுடிவது தன்னைக் கவர்ந்துள்ளதாகவும் கூறினார் அரசுத்தலைவர் ஒபாமா.

ஆதாரம் : EWTN








All the contents on this site are copyrighted ©.