2013-10-04 16:55:43

அமைதியும் நீதியும் நிறைந்த மியான்மாரைக் கட்டியெழுப்ப யங்கூன் பேராயர் அழைப்பு


அக்.04,2013. அமைதியும் நீதியும் நிறைந்த மியான்மாரைக் கட்டியெழுப்புவதில் அனைத்து மதத்தவர்களும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என அழைப்புவிடுத்துள்ளார் அந்நாட்டின் யங்கூன் பேராயர் Charles Bo.
புத்தம், இந்து, யூதம், கிறிஸ்தவம் என பல்வேறு மதங்களின் தலைவர்கள் ஒன்றிணைந்து நடத்திய அமைதி குறித்த கருத்தரங்கில் உரையாற்றிய பேராயர் Charles Bo அவர்கள், வளம் நிறைந்த்தொரு வருங்காலத்திற்கு, அமைதியும் நீதியும் நிலைநாட்டப்படவேண்டியது அவசியம் என்றார்.
புத்தரின் படிப்பினைகளிலிருந்தும், காந்தியின் வாழ்வு சாட்சியங்களிலிருந்தும் பல்வேறு எடுத்துக்காட்டுகளை முன்வைத்த யங்கூன் பேராயர் Charles Bo அவர்கள், மியான்மார் மக்களின் நல்வாழ்வுக்காக உழைத்து இரத்தம் சிந்தியவர்களின் தியாகம் வீணாகப்போவதற்கு அனுமதிக்கக்கூடாது எனவும் தெரிவித்தார்.

ஆதாரம் : Asia News








All the contents on this site are copyrighted ©.