அக். 03, 2013. கற்றனைத்தூறும்...... திருக்குறளின் சிறப்பு
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812 திருக்குறளின் முதல் பெயர்- முப்பால் திருக்குறள்
அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது. திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000, மொத்த
எழுத்துக்கள்- 42,194 திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள்
இடம் பெறவில்லை திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை, ஒரே பழம்-
நெருஞ்சிப்பழம், ஒரே விதை- குன்றிமணி. திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை,
மூங்கில். திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள, திருக்குறளில் இருமுறை
வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல், திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள் திருக்குறள்
மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர் திருக்குறளுக்கு முதன் முதலில்
உரை எழுதியவர்-மணக்குடவர் திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்-
ஜி.யு,போப் திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது. திருக்குறளில் கோடி என்ற
சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது. எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது. ஏழு
என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது. திருக்குறளை ஆங்கிலத்தில்
40 பேர் மொழிபெயர்த்துள்ளனர். 13 இந்திய மொழிகளிலும், 10 ஆசிய மொழிகளிலும், 14 ஐரோப்பிய
மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.