2013-10-01 16:48:16

வத்திக்கான் வங்கி வரலாற்றில் முதன் ஆண்டறிக்கை


அக்.,01,2013. வத்திக்கான் வங்கி எனப் பொதுவாக அழைக்கப்படும் IOR என்ற திருப்பீடத்தின் சமயப் பணிகள் நிறுவனம் தனது 125 வருட வரலாற்றில் முதன்முறையாக ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டறிக்கையில், வத்திக்கான் வங்கி குறித்த KPMG தணிக்கை நிறுவனத்தின் அறிக்கை உட்பட, 2012ம் ஆண்டிலிருந்து 2013ம் ஆண்டின் முதல் 8 மாதங்கள் வரை இடம்பெற்ற அனைத்து அலுவல் நடவடிக்கைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
இவ்வறிக்கை குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த IOR நிறுவனத் தலைவர் Ernst von Freyberg, இந்த அறிக்கையை வாசித்தால் இச்சமயப் பணிகள் நிறுவனம் பற்றிய தெளிவு ஏற்படும் என்று கூறினார்.
KPMG தணிக்கை நிறுவனம், வத்திக்கான் வங்கியைக் கணக்குப் பரிசோதனை நடத்திய விபரங்கள் குறித்த அறிக்கை உட்பட, அறுபது பக்கங்ளுக்கு மேற்பட்ட விரிவான நிதி அறிக்கைகள் இந்த ஆண்டறிக்கையில் உள்ளது எனவும் Freyberg தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.