திருத்தந்தை பிரான்சிஸ் : நாம் உண்மையிலேயே செபிக்கின்றோமா?
அக்.,01,2013. நாம் உண்மையிலேயே செபிக்கின்றோமா? கடவுளோடு நிலையான உறவு கொண்டிருக்காமல்,
உண்மையான மற்றும் முரண்பாடற்ற கிறிஸ்தவ வாழ்வை வாழ்வது கடினம் என்று இச்செவ்வாயன்று தனது
டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். @Pontifex என்ற தனது
டுவிட்டர் பக்கத்தில் தினமும் ஒன்பது மொழிகளில் எழுதிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,
கடவுளோடு நிலையான உறவில் வாழ்வதற்கு, செபம் இன்றியமையாதது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நன்றாகத் திட்டமிடப்பட்ட அறிவுச்சொத்து அமைப்பு, பொதுமக்களின் தேவைகளுடன்
முதலீட்டாளர்களின் தனிப்பட்ட உரிமைகளையும் சமநிலைப்படுத்துகின்றது என்று, திருப்பீடச்
செயலகம், @terzaloggia என்ற தனது டுவிட்டர் பக்கத்தில் இச்செவ்வாயன்று எழுதியுள்ளது.