இனப்பாகுபாட்டு வன்முறையை அகற்றுவதற்கு பாகிஸ்தான் அரசு கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்,
பேராயர் கூட்ஸ்
செப்.,27,2013. பாகிஸ்தானில் அதிர்ச்சியளிக்கக்கூடிய அளவில் வளர்ந்துவரும் சமய மற்றும்
இனப்பாகுபாட்டு வன்முறை அகற்றப்படுவதற்கு அரசு கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென கராச்சி
பேராயர் ஜோசப் கூட்ஸ் கேட்டுக்கொண்டார். பாகிஸ்தானில் அதிர்ச்சியளிக்கக்கூடிய அளவில்
சமய மற்றும் இனப்பாகுபாட்டு வன்முறை வளர்ந்துவருவதற்கு, Peshawar ஆலயத்தில் நடந்துள்ள
வன்முறை எடுத்துக்காட்டாய் உள்ளது என்று Fides செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்
பாகிஸ்தான் ஆயர் பேரவைத் தலைவரான பேராயர் கூட்ஸ். செப நேரத்தில் அப்பாவி மக்களைக்
கொலைசெய்வது, கோழைகளின் வெட்கத்துக்குரிய செயல் என்று கூறியுள்ள பேராயர் கூட்ஸ், Peshawar
வன்முறைக்குப் பொறுப்பானவர்கள் கைது செய்யப்படுவதற்கு உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு
அரசை வலியுறுத்தியுள்ளார். அதேநேரம், அந்நாட்டிலுள்ள அனைத்துச் சிறுபான்மையினரின்
வழிபாட்டுத்தலங்கள் பாதுகாக்கப்படுவதற்கும் அரசு ஆவன செய்யுமாறு கேட்டுள்ளார் பேராயர்
கூட்ஸ்.