செப்.,26,2013. அன்பு நேயர்களே, திருமதி சுகி பிரேமிளா இவ்வாண்டு சுதந்திர தினத்தன்று
தமிழக முதல்வரிடமிருந்து கல்பனா சாவ்லா விருது பெற்றிருப்பவர். இவர் கன்னியா குமரி மாவட்டம்,
விளவங்கோடு பறக்கும்படை தாசில்தார். பறக்கும்படை என்பது உணவுப்பொருள்கள் கடத்தப்படுவதைத்
தடுப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஓர் அமைப்பாகும். இந்தப் பணியில் இரவென்றும் பாராது
துணிச்சலாக உழைத்து 110 டன் அரிசி, 22 ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெய், 1,500 கிலோ அமோனியம்
நைட்ரேட் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளார் திருமதி சுகி பிரேமிளா. இவர் பெற்ற கல்பனா
சாவ்லா விருது பற்றி வத்திக்கான் வானொலிக்குத் தொலைபேசியில் அளித்த நேர்காணல் இதோ....